உத்திர பிரதேச சாலைவிபத்தில் 29 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் தலைநகர் லக்னோவில் இருந்து இரண்டடுக்கு பேருந்து புதுதில்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. சுமார் 50 பயணிகளுடன் சென்ற பேருந்து இன்று காலை யமுனா எக்ஸ்பிரஸ் வழிச்சாலையில் கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 29 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.